மத்தியஸ்தர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் வன்முறைகளைத் தடுக்க முயற்சி!!!
காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்கள் மோதல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு அதிக வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எகிப்திய குழுவொன்று இஸ்ரேலில் இருந்தும் அதே நேரத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இப்பகுதிக்கு வருகை தரலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்டனி பிளிங்கன் பயணம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அவர் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரை பகுதிக்கு பயணிப்பார் என அமெரிக்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
எகிப்து மற்றும் ஜோர்டானுக்குச் செல்வார் என்றாலும் பயங்கரவாத அமைப்பு என அழைக்கப்படும் ஹமாஸுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தாது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று ஐ.நா.பாதுகாப்புக் குழு மோதல் குறித்த தனது முதல் அறிக்கையை வெளியிட்டது, அதில் மத்தியஸ்தர்களைப் பாராட்டியதுடன், யுத்த நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
கிழக்கு ஜெருசலேமில் முஸ்லிம்களும் யூதர்களும் போற்றும் புனித தளமான அல்-அக்ஸாவில் மோதல்களில் உச்சக்கட்டத்தை அடைந்த பல வாரங்களுக்குப் பின்னர் மே 10 அன்று மோதல் தொடங்கியது.
அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலை எச்சரித்த பின்னர் ஹமாஸ் ரொக்கெட்டுகளை வீசி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் காஸாவில் பெரும்பாலானோர் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை