கிளிநொச்சியில் முதலாவது கொரோனா மரணம்!!

 


கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.


குறித்த மாதிரிகள் கடந்த இரவு (21) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


77 வயதுடைய குறித்த பெண் திருவையாறு பகுதியில் வசித்துவந்தவர் என்றும் அவருடைய மகன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றுவதாகவும் அவருடைய குடும்பத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.


பெண்ணின் சடலம், உறவினர் ஒருவர் முன்னிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வவுனியாவில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட ஆவாஎலிய நவகம்கொட கிராமத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.