3 சிறுமிகள் உட்பட 47 பேருக்கு யாழில் கொரோனா!!
யாழில் சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சங்கானை, பருத்தித்துறை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவர்கள் இனங்காணப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 11 வயது சிறுமி, 14 வயது சிறுமிகள் இருவர், 19 வயது இளைஞர் ஒருவர், 20 வயது இளைஞர்கள் ஐவர், 21வயது யுவதி ஒருவர், 24 வயது இளைஞர் ஒருவர் உட்பட்ட 19 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் , நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேரும், காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேரும் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும்,பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் மூவரும், தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை