நோன்புப்பெருநாள் தொடர்பில் விசேட அறிவித்தல்!!

 


வரவிருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்தவேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேகமாக பரவும் கொவிட்19 தொற்று மற்றும் வணக்கஸ்தலங்களில் கூட்டுச்செயற்பாடுகளை தவிர்க்குமாறு கூறும் சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை எந்தவொரு பள்ளிவாசலிலும் நடத்க்கூடாது என இலங்கை வக்பு சபை தீர்மானித்திருக்கின்றது.


அதன் பிரகாரம் ஈதுல் பித்ர் தினத்தில் சகல பள்ளிவாசல்களையும் மூடிவிட்டு பெருநாள் தொழுகையை வீட்டில் தங்கள் குடும்பத்தாருடன் தொழுதுகொள்ளவேண்டும்.


அத்துடன் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றோம். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.