கொரோனா தொற்றால் பத்தேகம சமித தேரர் மரணம்!

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காலமானார்.


கொரோனா தொற்றுக்குள்ளான பத்தேகம சமித தேரர் மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பௌத்த துறவியாக வரலாற்றில் பத்தேகம சமித தேரர் பதிவாகியுள்ளார்.


பத்தேகம சமித தேரர் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.