தனியார் பேருந்து சேவை நாளை முதல் குறைக்கப்படுகிறது!!

 


இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  நாளை (3) முதல் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளின் சேவையை 25% ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.


இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறினார்.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தனியார் பேருந்துகள் 90% திறனில் சேவையை வழங்கியதாகவும், தற்போது பயணிகளின் வீழ்ச்சியால் 50% க்கும் குறைவான திறனிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.


பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் தனியார் மற்றும் அரசுத் துறையில் பல அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் பேருந்து சேவைகள் நாளை முதல் 25% ஆக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


குறைந்த பயணிகள் காரணமாக எரிபொருள் செலவையே ஈடுசெய்ய முடியவில்லை என்று அவர் கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.