மூன்று மாத விடுப்பு பெற்றனர் சம்பந்தன்- திகாம்பரம்!

 


த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.


குறித்த இருவரும் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இதன்படி மே 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு இரா.சம்பந்தன் மற்றும் பழனி திகாம்பரம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.