Sputnik V அடுத்த இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு

 


ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சு சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

´ஸ்புட்னிக் V´ தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என்றும் களஞ்சியத்தில் இருந்து வௌியே எடுக்கப்பட்ட பின்னர் 2 மணித்தியாலங்களுக்குள் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சு சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியாக 15,000 தடுப்பூசிகள் ​கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.