விழி தேடி தவிக்கிறது

 


இதய வயலில்

நினைவுக் கதிராய்

ஞாபக அலைகள்....


அரிவாமுனை பட்ட 

உப்படியைப் போல

மனச்சருகு....


பொலிக்குவியலாய்

பளபளக்கிறது

ஆசைகள்...


நான் 

சூடா மாலைகள்

நாராகி கிடக்கிறது....


விழி தேடி 

தவிக்கிறது

தாய் நேசங்களுக்காய்...


கவி தாண்டிப்

பிறக்கிறது - ஒரு

கலை ஓவியம்......


கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.