யாழ்.பருத்தித்துறையில் 4 காவல்துறையினருக் கொரோனா!
யாழ். பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து இன்று காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அருகில் வர்த்தக நிலையம் நடத்துபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் காவல்துறை நிலையத்திற்கு அருகில் தேநீர் கடை ஒன்றினை நடத்தி வருபவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.சி.ஆர் பரிசோதனைக்காக அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை