தடுப்பூசி போட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்பி!!

 


கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தங்களுடைய ரசிகர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூரி வரை பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்ட உடன் அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் பதிவு செய்து ’நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் நீங்கள் போட்டு விட்டீர்களா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.