புதையல் தோண்டிய மூவர் மட்டக்களப்பில் கைது!!

 


மட்டக்களப்பு- வாழைச்சேனை, ஊத்துச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஊத்துச்சேனையில் தொல்பொருள் இடமாக அடையாளமிட்ட பகுதியில், சில சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதாக  நேற்று (வியாழக்கிழமை) இரவு, பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,புதையல் தோண்டலில் ஈடுபட்ட கொக்கட்டிச்சோலை, மண்டூர்,  சென்றல்காம்  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.