போலியான ஆவணத்துடன் வெளிநாடு செல்லமுற்பட்ட யுவதி கைது!!
முல்லைத்தீவு-மாங்குளத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழ் யுவதி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் பயணித்து அங்கிருந்து பிரான்ஸ் நோக்கி செல்லவுள்ள மாங்குளத்தினை சேர்ந்த 25 அகவையுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது போலியான பி.சி.ஆர்.அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு சென்ற யுவதியே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை