அயல் வீட்டுக்காரருக்கு மனைவி sms அனுப்பியதில் இருவர் வைத்தியசாலையில்!!

 


அயலில் உள்ள நபருக்கு “கோஹோமட சூது”( How are you darling ) என்று sms அனுப்பிய மனைவியால் வந்த தகராறில் கணவன் மற்றும் அயலவர் பலத்த கத்தி குத்து காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் இரு குடும்பத்தை சேர்ந்த மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.

தனது 35 வயது மனைவி அயலவருக்கு அனுப்பிய sms ஐ பார்த்த கணவன் அது தொடர்பாக மனைவியிடம் வினவியபொழுது , தான் தவறுதலாக அனுப்பியதாக மனைவி பதிலளித்த நிலையில் , அயலவரான 25 வயது நபரிடம் குறித்த கணவன் sms குறித்து வினவியுள்ளார் .
இறுதியில் வாக்குவாதத்தில் தொடங்கி கதிக்குத்தில் முடிந்ததில் இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்துள்ளதுடன் , கணவன் மற்றும் அயலவர் பலத்த கத்தி குத்து காயத்துடன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்பொழுது அமுல்படுத்தப்படுள்ள பயணத்தடையின் பின்னர் குடும்ப தகராறுகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.