கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை!

 


அத்தியாவசிய சேவை வழங்குநர்களில் வாகனங்களுக்கு ஒரு புதிய ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நாளை முதல் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஸ்டிக்கர் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப் பகுதியில் செல்லுபடியாகும்.

இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைக்காக கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசாலைக் குறைக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவ்வாறான ஸ்டிக்கர்களை தனிநபர்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.