மூன்று வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தம்!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்கமற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில் அணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை , இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்லா மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த இடைநீக்கம் வந்துள்ளது.
இதேவேளை கிரிக்கெட் வீரர்கள் உயிர் குமிழி மற்றும் ஹேட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர், வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை