இரண்டு சிறிய ரக விமானங்கள் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது!!

 


சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்ததாகவும், மற்றொரு விமானத்தில் குழந்தை உட்பட நான்கு பேர் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹூபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் நான்கு பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹூபர்டன் பகுதியில் விபத்துக்குள்ளானதை மீட்புகுழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு விமானங்களும் சனிக்கிழமை சுவிஸ்லாந்தில் உள்ள விமானநிலையங்களில் இருந்து புறப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.