யாழில் 6 நகரங்கள் பல்பரிமாண திட்டத்திற்கு தெரிவு!!

 


யாழ் மாவட்டத்தில் 6 நகரங்கள் உட்பட நாட்டில் 100 நகரங்கள் இத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக  2 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 100 நகரங்களை பல்பரிமாணத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டயாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக் கருவிற்கமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயல் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் நெல்லியடி,  வேலணை,  சாவகச்சேரி,  கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் போன்ற நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2000  மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு பிரதேசத்தை பல்பரிமாண நகர் ஆக்குவதற்கு சுமார்  20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

கொழும்பு,  அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய முக்கிய வணிக நகரங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை கொண்டிருப்பதனால் அவை தேசிய மற்றும் சர்வதேச வணிக வலையமைப்பின் மையங்களாக இணைக்கப்படும்.
இவற்றை மையப்படுத்தி நாட்டில் உருவாக்கப்படவுள்ள 100  நகரங்கள் வணிக நகரங்களுடன் இணைக்கப்படவுள்ளது.
இதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.