களனி கங்கையில் எண்ணெய் கலக்கும் ஆபத்து!

 


நாட்டில் பெய்யும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து மழை நீருடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது களனி கங்கையுடன் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்துக்கு அடியிலான தாங்கியின், உலை எண்ணெய் "ஹெய்யான்துடுவ" என்ற இடத்தின் வெள்ள நீரில் கலந்துள்ளது. இந்த நிலையில் அது களனி ஆற்றில் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நிலைமையைத் தடுக்க சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.