பாடசாலை அதிபரின் அசிங்கமான செயல்!!

 


மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட வேண்டும் எனத்தாயை அழைத்து இவ்வாரு தகாத முறையில் உரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த அதிபர் ஏற்கனவே தனது அதிகாரத்தைக் கொண்டு ஆசியை ஒருவரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்ததாகவும், அது தொடர்பில் பாடசாலைசமூகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டு மாகாணக் கல்வியதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தண்டக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீரழிக்கக் கூடிய இந்தகையவர்கள் உண்மையில் பணிநிறுத்தம் செய்யப்படவேண்டியவர் என்றும், இவர்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.