மேலும் சில பகுதிகள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டன!!
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின், குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதியும் மண்முனை பொலிஸ் பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குருநாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமமும் கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை