பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை!!


 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

மேலும் இதன்போது, பாடசாலைகளை கோயில்களிலும் மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகளை கட்டங்கட்டமாக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வலியுறுத்தினார்.

மேலும் இந்த திட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் ஆரம்பக் கட்டமாக 2 இலட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.