ஜூலை வரை வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

 


மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு - பிள்ளையாரடி பகுதியில், குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.