ஆபத்தான டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட மூவர் குணமடைவு!!

 


தெமடகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட யாரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை புறக்கணிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.