நடிகை ஷகிலாவின் நெகிழ்ச்சி பதிவு!!

 


குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஷகிலா என்றால் அனைவருக்கும் அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்றும் அவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்கள் மட்டுமே ஞாபகம் வரும். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் ஷகிலாவின் இமேஜ் டோட்டலாக மாறியுள்ளது. சக போட்டியாளர்கள், கோமாளிகள் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் லட்சக்கணக்கானவர்களும் ஷகிலாவை அம்மா என்று அழைத்து வருவது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

 

இந்த நிலையில் இதுகுறித்து ஷகிலா தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: முதலில் நான் உங்கள் எல்லோருக்கும் பெரிய நன்றியை சொல்லிக் கொள்கிறேன். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் எனக்கு உங்களுடைய ஆதரவு கிடைத்து நான் இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன். கண்டிப்பாக உங்களின் ஆதரவினால் தான் எனக்கு அந்த பரிசு கிடைத்தது. நாங்கள் சமைப்பது சாப்பிடுவது நன்றாக இருக்கு, நல்லா இல்லை என்று சொல்வதெல்லாம் போட்டிகள் நடக்கும் இடத்தில் நிகழ்வது.


ஆனால் அதற்கு பிறகு நான் இந்த பல நிகழ்ச்சிகளை பார்த்தபோது, எத்தனை பேர் என்னை அம்மா என்று கூப்பிடுவதை பார்த்து சந்தோஷமாக உள்ளது. உண்மையாகவே அளவில்லாத சந்தோஷம் என்னவெனில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே இத்தனை பிள்ளைகளின் தாய் என்பதுதான்’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.