இணையம் வழியாக மதுபானங்களை விற்றவர் கைது!!

 


அத்தியாவசிய உணவு பொருள் விற்பனை செய்யும் போர்வையில், இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸாரினால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் சாதாரண மதுபான போத்தல் ஒன்றை, குறித்த நபர் 5000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


அத்தோடு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தளை – அல்விஸ் டவுன் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்யும் போர்வையில், இணைய வழியாக பொருள் கொள்வனவுக்கான கோரிக்கையை பெற்று, பல்வேறு பகுதிகளுக்கு மதுபானங்களை குறித்த நபர் விநியோகித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.