இறந்துவிட்டதாக நினைத்தவர் வீட்டில் வந்து நின்றதால் அதிர்ச்சி!

 


இந்தியாவில் கொரோனாவால் இறந்துவிட்டதாக நினைத்து புதைக்கப்பட்ட பெண் மீண்டும் வீட்டுக்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் போதிலும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.


இந்த நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கொரோனா தடுப்பு நெறிகளை பின்பற்றி அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்ப வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாபேட்டை நகரை சேர்ந்தவர் கிரிஜம்மா. 70 வயது கிரிஜம்மா கொரோனா தொற்று காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மே 12ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய கணவருக்கு தகவல் அளித்தனர்.


அதனை தொடர்ந்து கொரோனா விதிகளை பின்பற்றி கிரிஜம்மா உடல் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருடைய வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. வீட்டில் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று கிரிஜம்மா வீட்டுக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


அதிகாரிகளின் அசட்டை காரணமாக உயிருடன் இருந்த கிரிஜம்மா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்ட உடல் யாருடையது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.