எமது குடும்பத்தில் பாதுகாப்பில்லை-ஹிருணிகா!!

 


துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நானும் எனது குடும்பத்தவர்களும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹிருணிகா பிசிசிக்கு கூறியுள்ளார்.

அத்துடன் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.

மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள ஹிருணிகா, ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து அவருக்கு தான் கடிதம் எழுதியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.