இன்று அஸ்ட்ரா செனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி பணி ஆரம்பம்!!

 


இன்று முதல் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கொழும்பு மாநகர அதிகார பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட, 70வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 ஆயிரத்து 500 பேர் வரை இருக்கின்றார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 2 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுகததாச மைதான வெளியரங்கிலும் பொரளை, கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிருலப்பனை முகலன் வீதியில் சிதுமினி சனசமூக நிலையத்திலும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.