ஓமானில் இலவச தடுப்பூசி வழங்கிவைப்பு!!
ஒமானில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை கட்டுப்படுத்த இலவச தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது முதியவர்கள் மற்றும் நெஞ்சக நோயுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நாளை முதல் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.
இதற்காக, தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மஸ்கட்டில் உள்ள ஓமான் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்.
அதேபோல் அல் செஹல் சுகாதார மையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி போடப்படும். சீப் பகுதியில் உள்ள டிரைவ் த்ரூ மையங்களில் வெள்ளி, சனிக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை