வெடிக்க வைத்து தகர்க்கப்பட்ட வெடிகுண்டு முள்ளிவாய்க்காலில்!!

 


நேற்று பிற்பகல்   முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 


முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமையச் சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது குறித்த பகுதியில் இராணுவத்தினர் குண்டு ஒன்றைச் செயலிழக்க செய்தமை தெரியவந்ததாகவும் 


முள்ளிவாய்க்கால் பகுதி மணல் தரையிலிருந்து மீட்கப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு இராணுவத்தினரால் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களை மீட்கும் இராணுவத்தினர் மற்றும் அதிரடிப்படையினர், பொலிஸாரும் இணைந்து அதனை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக செயலிழக்க செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.