ஜாங்கிரி


 தேவையான பொருட்கள்:


1. உளுத்தம் பருப்பு – 3 கப்

2. அரிசி மாவு – 1 தேக்கரண்டி

3. மாவு புட் கலர் – 1 சிட்டிகை

4. சர்க்கரை – 3 கப்

5. ஏலக்காய் – 3 எண்ணம்

6. எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1. உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் வரை நீரில் ஊறவைத்து, அதன் மீது இருக்கும் தோல்களை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

2. ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நன்கு அரைத்து எடுக்கவும்.

3. ஒரு வாணலியில் சர்க்கரை, ஏலக்காய் கலவையைப் போட்டுப் பாகு பதத்தில் காய்ச்சவும்.

4. ஊற வைத்துத் தோல் நீக்கப்பட்ட உளுத்தம்பருப்பை, அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

5. அதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும்.

7. ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்தத் துணியில் இந்த மாவுக் கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும்.

8. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான வெப்பத்தில் துணியில் வைத்திருக்கும் மாவை வட்டமாக அடுக்கடுக்காகப் பிழிய வேண்டும்.

9. மொறுமொறுப்பாக ஜாங்கிரியைப் பொறிக்காமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரைப் பாகில் பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

                                                                                            
                                                                                                                                               
 மாணிக்கவாசுகி செந்தில்குமார்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.