டுபாயை கலக்கிய இலங்கை இளைஞர்கள்!

 


அடுத்தடுத்து டுபாயில் அதிர்ஸ்ட இலாபச் சீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை இலங்கை இளைஞர்கள் வென்றுள்ளனர்.


டுபாயில் தொழில் செய்துவரும் ரசிக்க என்கிற இளைஞன், இம்முறை பிக் டிக்கட் என்கின்ற டுபாயில் பிரபல்யமான அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் 15 மில்லியன் டிரஹம் (இலங்கை ரூபாயில் 81 கோடி ரூபா) முதல் பரிசாக வெற்றிகொண்டிருக்கின்றார்.


இந்த தகவலை அபுதாபி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. சிவில் பொறியியலாளரான ரசிக்க, தன்னுடன் மேலும் ஐவரை இணைத்துக் கொண்டு இந்த டிக்கட்டை  வாங்கிய நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களை வென்றுள்ளதாக கூறப்படுகின்றது.


இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் டுபாயில் மொஹமட் இம்ஷிக் என்கின்ற இலங்கை இளைஞன் 12 மில்லியன் டிரஹமை வெற்றிகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.