தடுப்பூசி பெறுவதில் அதீத ஆர்வம் காட்டும் யாழ்.காரைநகர் மக்கள்!

 


யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 13,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.


நேற்று 19 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 13 ஆயிரத்து 892 பேர் இன்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.


இந்த எண்ணிக்கை 70.99 சதவீதமானோர் பெற்றுள்ளனர். கடந்த மூன்று நாள்களில் 22 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றியுள்ளனர்.


50%, 60% 70% என 3 நாள் சிறப்பான முன்னேற்றம். இதேவேளை தடுப்பூசி பெறுவதில் யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்கள் அதீக அக்கறை காட்டிவருகின்றனர்.


நேற்றும் 964 பேருக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1114 மக்கள் தடுப்பூசி பெற்றிருக்கின்றனர். அதேவேளை ஊர்காவற்றுறை, நல்லுார் பிரதேசங்களிலும் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.