கொரோனா தொற்று - இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 43 பேர் மரணம்!

 


நாட்டில் நேற்றய தினம் மேலும் 2912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 43 பேர் கொரோணா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.


இரண்டாயிரத்து 912 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்.


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86ஆயிரத்து 364ஆக அதிகரித்துள்ளது.


மேலும் நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.