உலகக் கிண்ண T 20 தொடரை மத்திய கிழக்கு நாட்டில் நடத்த திட்டம்!!

 


இந்த மாத இறுதியில் எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரை நடத்துவதற்கான இடம் குறித்த இறுதி முடிவு  எடுக்கப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.


இந்தியாவிலேயே போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஐ.சி.சி.க்கு ஒரு மாத கால அவகாசம் கோரிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு வந்துள்ளது.


கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளில் குறிப்பாக ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.


ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரையும் அங்கு நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இந்த மாத இறுதியில் போட்டியை நடத்தும் நாடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.