170,022 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்பு!!

 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 07 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை 579 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.