பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக விக்னேஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்தால் உண்மை வெளிவரும்-பொ.கஜேந்திரகுமார்!


வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பது உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாக அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வட-கிழக்கில் தாங்களும் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் ஆகியோர் மக்களை ஏமாற்றி ஏதோ மாகாணசபை முறைமையில் உண்மையில் அதிகாரங்களிருக்கின்றன. ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு அந்த அதிகாரங்களை அனுபவிப்பதற்கு அரசாங்கம் மறுக்கிறது என்ற பொய்யைச் சொல்லி இன்னும் இன்னும் தமிழ்மக்களை இந்த மாகாணசபை முறைமைக்குள் விரும்பி முடக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.