இலங்கைக்கு 2 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி!!


சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக 2 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்ளூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

பீஜிங்கிலிருந்து தடுப்பூசி அளவுகளுடன் புறப்பட்ட இந்த விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை 5.10 மற்றும் 5.40 மணிக்கு தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி திட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து ஒரே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகள் இதுவாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.