ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!!


 * எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

* என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே.

* கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையைப் பயிற்றுவிப்பதற்கு.

* அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே.

* நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

* தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.

* தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளில் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.

* வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.

* அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.

* பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்டபின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.

* மனிதன் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டே இருப்பான்.

* துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.

* மற்றவர்களுக்காகவும் வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.

* கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.

* வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக் கூடாது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.