ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!!
* எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்.* என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே.
* கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையைப் பயிற்றுவிப்பதற்கு.
* அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே.
* நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.
* தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.
* தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளில் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.
* வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
* அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
* பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்டபின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.
* மனிதன் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டே இருப்பான்.
* துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.
* மற்றவர்களுக்காகவும் வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.
* கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.
* வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக் கூடாது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை