சிறுமி கடத்தல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கைது!!

 


கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

முன்னாள் மாலைத்தீவு மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

45 வயதுடைய முகமது அஷ்மாலி என்பவர் கைது செய்யப்பட்டதை இங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.