படுகொலைக்கு நீதி கோரிய 16 பேர் கைது!

 


இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட முயன்ற 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவரது பெற்றோர் உட்பட பொதுமக்கள் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பஸ்ஸில் நகருக்கு வந்தபோது 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் கடந்த மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 34 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் தந்தை, தாய் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவுக்கு முன்பாக கவனயீர்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (07) முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பஸ் ஒன்றில் வந்திருந்த நிலையில் அங்கு இளைஞர்களும் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து அங்கு பொலிஸார், புலனாய்வு பிரிவினர் இராணுவத்தினர், குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் பஸ்ஸில் வந்தவர்கள் அங்கிருந்து விலகி சென்ற நிலையில் அவர்களை பொலிஸார் பின் தொடர்ந்து அந்த பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அதிலிருந்த 16 பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.