பண மோசடியில் ஈடுபட்ட பெண் சிக்கினார்!

 


ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பல பகுதிகளில் இவர் இவ்வாறு பணமோசடி செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஜப்பான் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபா பண மோசடி செய்தமை குறித்து கடுவெல பகுதி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவகமுவ பகுதியை சேர்ந்த இருவருக்கு 8 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபருக்கு எதிராக பண மோசடி குறித்து 32 வழக்குகள் உள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன், 17 பிடியாணை உத்தரவுகளும் விடுக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் தெஹியோவிட பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்ததுடன், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.