காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!!


 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தங்களை அச்சுறுத்தாதே எமது உறவுகள் எங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், உறவுகளே தேடுவது தேச துரோகமா, என பல கோஷங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,

“ நாம் போராடும் இந்த பல்கலைக்கழகத்தில் வைத்தே எமது பிள்ளைகளை பிடித்துச் சென்றனர். அவர்களுக்கான முடிவு இதுவரையில் கிடைக்கவில்லை. இதே அரசாங்கம்தான் அப்போது பிடித்துச் சென்றது.

மேலும் இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்குவதாக இல்லை. ஆகையால் சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு உதவ வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.