இலவச தடுப்பூசிகளை தனியார் வைத்தியசாலைகளில் செலுத்தும் திட்டம்!!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயற்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தை சென்னையில் எதிர்வரும் 28ஆம் திகதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை-கோவை என இரு இடங்களில் தனியார் வைத்தியசாலைகள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colomb
கருத்துகள் இல்லை