கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கு வங்காளத்தில் நீடிப்பு!!
கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வார இறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதி நிகழ்ச்சியில் 20 பேர் வரையிலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகளும் வழக்கமான நேரங்களில் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை