228 கடற்படையினருக்கு மன்னாரில் கொரோனா!

 


மன்னாரில் 228 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 248 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 291 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 248 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்றாளர்கள் அனைவரும் 18 தொடக்கம் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் தொற்றிற்குள்ளானவர்கள் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயிற்சி நிலை கடற்படையினராக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.