ஒருநாள் தொடரில் தோற்றது இலங்கை!!

 


இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

லண்டன்- கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனஞ்சய டி சில்வா 91 ஓட்டங்களையும் தசுன் சானக 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் 5 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களையும் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக தனது சிறந்த ஒருநாள் பந்துவீச்சை பதிவுசெய்த சேம் கர்ரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.