இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து!!
இந்தியா தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் இந்தத் தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தவர்கள் உட்பட 30 பேர் இந்தியா அணியுடனான சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர் என ஊடகவியலாளர் ரெக்ஸ் கிளெமெண்டைன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த ஒப்பந்தத்தில் மூத்த கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு குறித்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்திய அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் தெரிவு செய்யப்படாத டெஸ்ட் வீரர்களுக்கு சுற்றுப்பயண ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை என்றும் அறிய முடிகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை