மக்களின் தேவையறிந்து கடமையாற்றுவேன் - ஜெகத் பளிகக்கார!!

 


வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார்.

வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார இன்றைய தினம் காங்கேசன்துறையில் உள்ள மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் தமது கடமைகளை  பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அவர்,

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன். நான் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள இந்த வேளையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியாக அமைந்துள்ளது. அதனால் மக்களின் தேவைகளை அறிந்து சேவையை வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

வடக்கு மாகாணம் எனக்கு புதிது இல்லை. காங்கேசன்துறை, யாழ்.பிராந்தியங்களில் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகவும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் கடமையாற்றியுள்ளேன் .

அதனால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிந்த நான் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.